இந்தியாவுக்கு கட்டாயம் பதக்கம் வென்று தருவார் என எதிர்பார்க்கப்பட்ட மல்யுத்த வீரர் சுஷில் குமார் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.
இரண்டு முறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவரான சுஷில் 74 கிலோ பிரிவில் பஹ்ரைனின் ஆடம் பட்ரோவிடம் 3-5 என்ற புள்ளிக் கணக்கில் தகுதிச் சுற்றில் அதிர்ச்சித் தோல்வியடைந்தார்.
முதல் கட்டத்தில் 2-1 என சுஷில் முன்னிலை பெற்ற நிலையில், இரண்டாம் கட்டத்தில் அதை தக்க வைக்க முடியவில்லை. பட்ரோவின் உடும்பு பிடிகளை சமாளிக்க முடியாமல் அதிர்ச்சித் தோல்வியடைந்தார். எனினும் பட்ரோவ் இறுதிச் சுற்றுக்கு
முன்னேறினால், வெண்கலம் வெல்லும் வாய்ப்பு சுஷில்குமாருக்கு உள்ளது.