செய்திகள்

சென்னை ஓபன் சேலஞ்சர்: காலிறுதியில் யூகி பாம்ப்ரி

DIN

சென்னை ஓபன் சேலஞ்சர் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர்பிரிவில் காலிறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் யூகி பாம்ப்ரி முன்னேறினார்.
சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்று ஆட்டத்தில் சக நாட்டவரான சித்தார்த் ராவத்தை போட்டித் தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் யூகி பாம்ப்ரி எதிர்கொண்டார்.
முதல் செட்டை 6-2 என்ற கணக்கில் எளிதில் கைப்பற்றிய யூகி, இரண்டாவது செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
இந்தப் போட்டியில் காலிறுதிக்கு நுழையும் ஒரே இந்தியர் இவர் மட்டுமே. வியாழக்கிழமை நடைபெறவுள்ள காலிறுதிச் சுற்றில் ஜப்பான் வீரர் யசுதாகா யுச்சியாமாவை அவர் எதிர்கொள்கிறார்.
புதன்கிழமை நடைபெற்ற மற்றோர் ஆட்டத்தில் போட்டித் தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் ஜோடான் தாம்சன் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
காலிறுதியில் செர்பியாவின் டி.பெட்ரோவிக்கை அவர் எதிர்கொள்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய பிரதேசம்: 4 சாலை விபத்துகளில் 9 போ் உயிரிழப்பு

வட மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்

நெல் கொள்முதல் லஞ்சத்தை எதிா்த்தோரை கைது செய்வதா?: அன்புமணி கண்டனம்

பாய்மர வீராங்கனைக்கு ஜி.கே.வாசன் வாழ்த்து

டெக் மஹிந்திரா நிகர லாபம் 41% சரிவு

SCROLL FOR NEXT