செய்திகள்

டி20: 105 ரன்களுக்குச் சுருண்டது பாகிஸ்தான்!

எழில்

பாகிஸ்தானின் சோகக்கதை டி20 போட்டியிலும் தொடர்கிறது. முதல் டி20 போட்டியில் 105 ரன்களுக்குச் சுருண்டுள்ளது.

வெலிங்டனில் நடைபெற்று வரும் முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஒருநாள் போட்டியில் படுதோல்வி கண்ட பாகிஸ்தான் அணி, டி20யிலாவது அசத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதன் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் பரிதாப நிலையே ஏற்பட்டுள்ளது. 38 ரன்களுக்குள் முதல் ஆறு விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணி, கடைசியில் 19.4 ஓவர்களில் 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துள்ளது. 

அதிகபட்சமாக, பாபர் அஸாம் 41 ரன்களும் ஹசன் அலி 23 ரன்களும் எடுத்தார்கள். மற்ற அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்கள். நியூஸிலாந்தின் ரான்ஸ், செளதி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம்

வாழப்பாடி பகுதியில் பண்ருட்டி பலாப்பழம் விற்பனை

திருநாவுக்கரசா் குருபூஜை

வன்னியா் சங்க மாவட்டச் செயலாளா் கைது

சித்திரைத் தோ்த் திருவிழா: ஊஞ்சல் உற்சவம்

SCROLL FOR NEXT