ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் தோல்வியடைந்துள்ளார்.
மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான நடால் - உலகின் 6-ஆம் நிலை வீரரான மரின் சிலிச் ஆகியோர் காலிறுதியில் மோதினார்கள். பரபரப்பான இந்த ஆட்டத்தில் 3-6 6-3 6-7(5) 6-2 2-0 என்ற செட் கணக்கில் மரின் சிலிச் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
கடைசி செட்டின்போது நடாலுக்குக் காயம் ஏற்பட்டது. இதனால் அவரால் ஆட்டத்தைத் தொடரமுடியாத நிலை ஏற்பட்டதால் போட்டியிலிருந்து விலகினார். இதையடுத்து மரின் சிலிச் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.