ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச் சுற்றில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் தோல்வியடைந்துள்ளார்.
மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான நடால் - உலகின் 6-ஆம் நிலை வீரரான மரின் சிலிச் ஆகியோர் காலிறுதியில் மோதினார்கள். பரபரப்பான இந்த ஆட்டத்தில் 3-6 6-3 6-7(5) 6-2 2-0 என்ற செட் கணக்கில் மரின் சிலிச் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
கடைசி செட்டின்போது நடாலுக்குக் காயம் ஏற்பட்டது. இதனால் அவரால் ஆட்டத்தைத் தொடரமுடியாத நிலை ஏற்பட்டதால் போட்டியிலிருந்து விலகினார். இதையடுத்து மரின் சிலிச் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.