காயம் காரணமாக இந்திய கிரிக்கெட் அணி வீக்கெட் கீப்பர் ரித்திமான் சாஹாவுக்கு தோளில் அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 33 வயதான ரித்திமான் சாஹா, தென்னாப்பிரிவில் சுற்றுப்பயணம் செய்த போது, கேட்ச் பிடிக்க முயன்றதில் தோளில் காயம் ஏற்பட்டது.
தோள் பட்டை காயம் சாஹாவின் கிரிக்கெட் எதிர்காலத்தையே சீர்குலைத்து விடும் நிலை உள்ளது. இங்கிலாந்தில் வரும் ஆகஸ்ட் மாதம் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. இதனால் அவர் எதிர்வரும் எந்த தொடரிலும் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.