செய்திகள்

ஹால் ஆப் ஃபேம் ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் ராம்குமார் ராமநாதன்

DIN

ரோட் தீவுகள் நியுபோர்ட்டில் நடைபெற்று வரும் ஹால் ஆப் ஃபேம் ஓபன் டென்னிஸ் போட்டி அரையிறுதிக்கு இந்தியாவின் ராம்குமார் ராமநாதன் தகுதி பெற்றுள்ளார். அவர் முதன்முறையாக ஏடிபி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த 23 வயது ராம்குமார் ராமநாதன் 7-5, 6-2 என்ற செட் கணக்கில் கனடாவின் வாúஸக் பாசிபிஸில்லை காலிறுதியில் வீழ்த்தினார். ஏடிபி தரவரிசையில் 161-ஆவது இடத்தில் உள்ள ராம்குமார் அடுத்த ஆட்டத்தில் அமெரிக்காவின் டிம் சிùஸக்கை எதிர்கொள்கிறார்.
இரட்டையர் காலிறுதியில் லியாண்டர் பயஸ்-அமெரிக்காவின் ஜேமி செரட்டனி இணை 3-6,, 6-7 என நேர் செட்களில் ஜீவன் நெடுஞ்செழியன்-ஆஸ்டின் கிராஜிசெக் இணையிடம் தோல்வியுற்று வெளியேறியது. இந்தியாவின் டி விஜ் சரண்-ஜேக்சன் வித்ரோ இணை 7-6, 6-3 என நேர் செட்களில் மேத்யு எப்டன்-செர்ஜி ஸ்டாக்ஸ்கை இணையை வீழ்த்தியது அரையிறுதிக்கு முன்னேறியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

ஜெயக்குமார் மரணம்: விசாரணையில் அடுத்தடுத்து திருப்பம்!

தங்கலான் வெளியீட்டுத் தேதி இதுதானா?

வாரணாசி கோவிலில் கொல்கத்தா அணி வீரர்கள்!

SCROLL FOR NEXT