முகப்பு
செய்திகள்

என்ன செய்தாலும் மீம் ஆக மாற்றுகிறார்கள்: விராட் கோலி வேதனை!

சாலைகளில் குப்பை வீசுபவர்களை அனைவரும் கண்டிக்க வேண்டும் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்...

Updated On : 30 ஜனவரி, 2024 at 3:57 PM
பகிர்:

சாலைகளில் குப்பை வீசுபவர்களை அனைவரும் கண்டிக்க வேண்டும் என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ட்வீட் செய்ததாவது:

சாலையில் மக்கள் குப்பை வீசுவதைக் கண்டேன். அவர்களை நன்குக் கண்டித்தேன். விலை உயர்ந்த காரில் சென்றாலும் மூளை வேலை செய்வதில்லை. இவர்கள் நம் நாட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்வார்களா? இதுபோல நடப்பதைக் கண்டால் நீங்களும் அவர்களைக் கண்டியுங்கள். இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் என்றார். இதுகுறித்த விடியோவையும் பகிர்ந்தார்.

Advertisement

விராட் கோலியின் இந்த ட்வீட்டைக் கிண்டலடித்தும் விமரிசனம் செய்தும் சிலர் ட்வீட் செய்தார்கள். இதையடுத்து உடனடியாக அடுத்த ட்வீட்டில் தன் கவலையைப் பகிர்ந்துகொண்டார் கோலி. அதில் அவர் கூறியதாவது:

தைரியமாக இதுபோல செய்யத் துணிவு இல்லாதவர்கள், கிண்டலாகப் பார்க்கிறார்கள். இன்றைக்கு எல்லாமே மீம் ஆக மாற்றப்படுகிறது. அவமானம் என்று வேதனையுடன் ட்வீட் செய்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments