செய்திகள்

ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டித் தொடர்: அரையிறுதியில் இந்தியாவின் பி.வி.சிந்து தோல்வி! 

DIN

லண்டன்: பர்மிங்காம் நகரில் நடைபெற்று வரும் ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டித் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து தோல்வி அடைந்து வெளியேறினார்.

பெருமைமிகு ஆல் இங்கிலாந்து பேட்மிண்டன் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதலாவது அரையிறுதிச் சுற்று ஆட்டம் ஒன்று சனிக்கிழமையன்று நடைபெற்றது.

இதில் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பானின் அகனே யமகுச்சியுடன் மோதினார். இப்போட்டியின் முதல் செட்டை சிந்து 21-19 என கைப்பற்றினார். அடுத்த செட்டை யமகுச்சி 21-19 என கைப்பற்றினார். இதனால் மூன்றாவது செட்டை வெல்லப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்தது.

பரபரப்பாக நடைபெற்ற மூன்றாவது செட்டின் இறுதியில் யமகுச்சி 21-18 என மூன்றாவது செட்டை கைப்பற்றினார். இதன்மூலம் 19-21, 21-18, 21-18 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்த பி.வி.சிந்து தொடரைவிட்டு வெளியேறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இது எதுங்க அட்டைப் படம்? சோனல் சௌகான்...

பார்வை ஒன்று போதுமே... விமலா ராமன்!

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

SCROLL FOR NEXT