முகப்பு
செய்திகள்

உபேர் கோப்பை: இந்தியா வெற்றி

உபேர் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் இந்திய மகளிர் அணி 4-1 என்ற ஆட்டக்கணக்கில் ஆஸி. அணியை வீழ்த்தியது.

Updated On : 22 மே, 2018 at 1:38 AM
பகிர்:

உபேர் கோப்பை பாட்மிண்டன் போட்டியில் இந்திய மகளிர் அணி 4-1 என்ற ஆட்டக்கணக்கில் ஆஸி. அணியை வீழ்த்தியது.
உலக குழு சாம்பியன் போட்டி (தாமஸ், உபேர் கோப்பை) பாங்காக்கில் நடந்து வருகிறது. ஏற்கெனவே இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் பிரான்ஸ், கனடாவிடம் தோல்வியுற்றது.
இதற்கிடையே திங்கள்கிழமை நடைபெற்ற உபேர் கோப்பை ஆட்டத்தில் சாய்னா நேவால் தலைமையிலான மகளிர் அணி 4-1 என்ற கணக்கில் ஆஸியை வென்றது.
சாய்னா 2-0 என்ற செட்கணக்கில் சுவான்வெண்டி சென்னை வென்றார். வைஷ்ணவி ரெட்டி 2-0 என்ற கணக்கில் ஜெனிபர் டாமை வீழ்த்தினார். அனுரா பிரபுதேசாய் 2-0 என எசிலி பங்கையும், இரட்டையர் பிரிவில் சனியோகிதா-கோர்பட இணை வென்றது. ஆனால் மற்றொரு இணையான மேக்னா-பூர்விஷா தோல்வியடைந்தது. நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற அடுத்து ஜப்பானை இந்தியா வெல்ல வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.