டி20 ஆட்டம்: இந்திய மகளிர் ஏ அணி வெற்றி
ஆஸி. மகளிர் ஏ அணிக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்திய மகளிர் ஏ அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆஸி. மகளிர் ஏ அணிக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் இந்திய மகளிர் ஏ அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஒரு நாள் ஆட்டத் தொடரை ஆஸி. ஏ அணி வென்ற நிலையில் 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் திங்கள்கிழமை தொடங்கியது. முதலில் ஆடிய ஆஸி. ஏ அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்களை எடுத்தது.
பின்னர் ஆடிய இந்திய அணியில் ஸ்மிருதி மந்தானா 40 பந்துகளில் 72 ரன்களையும், ஹர்மன்ப்ரீத் கெளர் 39 பந்துகளில் 45 ரன்களையும் விளாசி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர். ஆல்ரவுண்டர் பூஜா 21 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஒரு ஓவர் மீதமுள்ள நிலையில் இந்தியா 6 விக்கெட்டை இழந்து 163 ரன்களுடன் வெற்றி இலக்கை எட்டியது.