ஓய்வு பெறுகிறார் அலாஸ்டர் குக்
இந்தியாவுக்கு எதிரான 5-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியுடன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறப்போவதாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் அலாஸ்டர் குக் (33) அறிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான 5-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியுடன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறப்போவதாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் அலாஸ்டர் குக் (33) அறிவித்துள்ளார்.
இரு அணிகளிடையேயான 5-ஆவது டெஸ்டி கிரிக்கெட் போட்டி, ஓவல் மைதானத்தில் வரும் 7-ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இங்கிலாந்து உள்நாட்டு அணியான எஸ்ùஸக்ஸில் அங்கம் வகித்த அலாஸ்டர் குக், கடந்த 2006-ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் தடம் பதித்தார்.
அலாஸ்டர் குக் தனது ஓய்வு முடிவு குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கடந்த சில மாதங்களாக யோசித்து, பலரிடம் கலந்தாலோசித்து இந்த ஓய்வு முடிவை எடுத்துள்ளேன். இது ஓர் வருத்தமான நாள் என்றாலும், என்னால் முடிந்த வரையில் இங்கிலாந்து அணிக்கு பங்களிப்பு செய்ததை எண்ணி மகிழ்கிறேன். இங்கிலாந்து கிரிக்கெட்டின் பல்வேறு முக்கியமான சூழ்நிலைகளில் அங்கம் வகித்தது சிறப்பு மிக்கது.
சக வீரர்களுடன் ஓய்வு அறைச் சூழலை இனி அணுக இயலாது என்பது வருத்தமான ஒன்று என்றாலும், எனது முடிவுக்கு இதுவே சரியான தருணம். இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து, அவர்களுக்கு வழிவிட வேண்டிய நேரமிது. எனது கிரிக்கெட் வாழ்க்கையை சீர்படுத்திய எஸ்ùஸக்ஸ் அணிக்கும், முன்னாள் கேப்டன் கிரஹாம் கூச்சுக்கும் நன்றிகள் என்று அலாஸ்டர் கூறியுள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், எதிர்வரும் சீசனில் எஸ்ùஸக்ஸ் அணிக்காக உள்நாட்டுப் போட்டிகளில் விளையாட இருப்பதாக அலாஸ்டர் கூறியுள்ளார்.
* டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் (12,254) அடித்த இங்கிலாந்து வீரர் என்ற பெருமை அலாஸ்டர் குக் வசமே உள்ளது.