செய்திகள்

செரீனா மோதல் தொடர்பாக கார்ட்டூன் வரைந்தவருக்கு கண்டனம்

DIN


யுஎஸ் ஓபன் போட்டியில் செரீனா-நடுவர் மோதல் தொடர்பாக கார்ட்டூன் வரைந்த ஆஸி. நாட்டைச் சேர்ந்த கார்ட்டூனிஸ்ட்டுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நியூயார்க்கில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஒஸாகாவும், செரீனாவும் மோதினர். இதில் நடுவரின் செயல்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து செரீனா மோதலில் ஈடுபட்டார். நடுவர் ஒரு திருடர், பாலியல் ரீதியில் வீராங்கனைகளை நடத்துகிறார் எனசெரீனா புகார் கூறியிருந்தார். 
இந்நிலையில் ஆஸி. நாட்டைச் சேர்ந்த மார்க் நைட் என்ற கார்ட்டுனிஸ்ட் செரீனா பிரச்னை தொடர்பாக கார்ட்டூன் வரைந்தார்.
அதில் செரீனா தனது டென்னிஸ் மட்டையை கீழே போட்டு உடைப்பது போன்றும், நடுவர் ஒஸாகாவிடம் அவரை வெல்ல வைத்து விடுங்கன் என கூறுவதாகவும் வரையப்பட்டிருந்தது.
அது மெல்போர்ன் நகர நாளிதழ் ஒன்றில் வெளியானது. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஹாரிபாட்டர் கதை ஆசிரியர் ரெளவ்லிங், கார்ட்டுன் இனரீதியில் பாகுபாட்டை வெளிப்படுத்துகிறது எனக் கண்டனம் தெரிவித்தார். இதற்கு மார்க் நைட் மறுப்பு தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் பலி: இந்த ஆண்டு இதுவரை 9 பேர் பலி

SCROLL FOR NEXT