செய்திகள்

சாஃப் கோப்பை கால்பந்து: மாலத்தீவு சாம்பியன்

தினமணி

டாக்காவில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு (சாஃப்) சுசூகி கோப்பைக்கான போட்டியில் இந்தியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி மாலத்தீவு சாம்பியன் பட்டம் வென்றது.
 நடப்பு சாம்பியன் இந்திய அணி 8-ஆவது முறையாக பட்டத்தை வெல்லும் முனைப்போடு இப்போட்டியில் பங்கேற்றது. அரையிறுதியில் 3-1 என்ற கோல் கணக்கில் வைரியான பாகிஸ்தானை வீழ்த்தியது. மாலத்தீவு அணி 3-0 என நேபாளத்தை வீழ்த்தியது. இந்நிலையில் டாக்கா தேசிய மைதானத்தில் சனிக்கிழமை நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியாவை 2-1 என்ற கோல் கணக்கில் வென்று மாலத்தீவு சாம்பியன் பட்டம் வென்றது.
 ஆட்டத்தின் தொடக்கம் முதலே மாலத்தீவு அணி ஆதிக்கம் செலுத்தியது. முதல் பாதியில் 1-0 என முன்னிலை பெற்ற நிலையில், இரண்டாவது பாதியிலும் சிறப்பாக ஆடி 2-1 என வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT