செய்திகள்

ரசிகர்களின் தொல்லையால் தற்காலிகமாக ட்விட்டரை விட்டு வெளியேறியுள்ள சானியா மிர்சா!

எழில்

2018 ஆசியக் கோப்பையில் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பி உள்ள இந்திய-பாகிஸ்தான் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. 

இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை மணந்துள்ள பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, சில நாள்களுக்குச் சமூகவலைத்தளங்களிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தை முன்னிட்டு ரசிகர்கள் பலரும் அவரிடம் ஏராளமான கேள்விகளைக் கேட்டு தொந்தரவு செய்வதால் அவர் இம்முடிவை எடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் தொடங்குவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பு, சமூகவலைத்தளங்களை விட்டு வெளியேறுவது பாதுகாப்பானது. ஏனெனில் இங்கே மடத்தனமாகக் கூறப்படப்போகிற கருத்துகள், கர்ப்பிணியை மட்டுமல்லாமல் சாதாரண மனிதனையும் உடல்நலமில்லாமல் செய்துவிடும். பிறகு பார்க்கலாம் மக்களே. ஞாபகம் கொள்ளுங்கள், இது கிரிக்கெட் ஆட்டம் மட்டுமே என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

துணைவேந்தர்கள் நியமனம்.. ராகுல் காந்தி கருத்துக்கு கல்வியாளர்கள் எதிர்ப்பு!

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க சிறப்பு ஏற்பாடு

பகல் கனவு காணும் பாஜக: நவீன் பட்நாயக் பதிலடி

இலங்கையில் திவ்ய பாரதி!

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

SCROLL FOR NEXT