செய்திகள்

ரஷித் கான், அஷ்கர், ஹாசனுக்கு அபராதம்

DIN

ஆசிய கோப்பை போட்டியில் நடத்தை விதிகளை மீறி செயல்பட்டதாக ஆப்கன் கேப்டன் அஷ்கர், ரஷித் கான், பாக். வீரர் ஹாசன் அலி ஆகியோருக்கு அபராதம் விதித்து உத்தரவிட்டது ஐசிசி.
 ஆப்கன்-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தின் போது, ஆப்கன் பந்துவீச்சாளர் ரஷித் கான்,
 ஆட்டமிழந்து சென்ற பாக். வீரர் ஆஸிப் அலியை நோக்கி சர்ச்சைக்குரிய வகையில் சைகை காண்பித்தார். அதே நேரத்தில் கேப்டன் அஷ்கர் ஆப்கன், பாக் பந்துவீச்சாளர் ஹாஸன் அலியை வேண்டும் என்றே தோளோடு உரசிச் சென்றார். மேலும் பாக் வீரர் ஹாஸன் அலி, ஆப்கன் பேட்ஸ்மேன் ஹஸ்மத்துல்லாவை நோக்கி பந்தை எறிவது போன்று சைகை காண்பித்தார். இவை எல்லாம் ஐசிசி நடத்தை விதிகளை மீறிய செயலாகும் எனக்கூறி ஐசிசி மூவருக்கும் அபராதம் விதித்தது. அவர்களுக்கான ஆட்ட ஊதியத்தில் 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

கோடை வெயிலுக்கு இடையே கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு!

SCROLL FOR NEXT