செய்திகள்

ஆசிய கிளப் வாலிபால் போட்டி: சென்னை ஸ்பார்டன்ஸ் பங்கேற்பு

DIN

ஆசிய கிளப் வாலிபால் போட்டியில் புரோ வாலிபால் லீக் சாம்பியன் சென்னை ஸ்பார்டன்ஸ் அணி கலந்து கொள்கிறது என இந்திய வாலிபால் சம்மேளன செயல் அலுவலர் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
 கடந்த பிப்ரவரி மாதம் விஎஃப்ஐ மற்றும் சோனி நிறுவனம் சார்பில் நடைபெற்ற புரோ வாலிபால் போட்டியில் 6 அணிகள் பங்கேற்றதில் சென்னை ஸ்பார்டன்ஸ் அணி இறுதி ஆட்டத்தில் காலிக்கட் ஹீரோஸ் அணியை 3-0 என்ற செட் கணக்கில் வென்று பட்டத்தை கைப்பற்றியது.
 இந்நிலையில் எஃப்ஐவிபி ஆசிய கிளப் வாலிபால் போட்டியில் சென்னை ஸ்பார்டன்ஸ் அணியும் கலந்து கொள்கிறது.
 சென்னையில் சனிக்கிழமை ஸ்பார்டன்ஸ் அணிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற விஎஃப்ஐ செயல் அலுவலர் மிஸ்ரா கூறியதாவது:
 அடுத்த ஆண்டு சீசன் முதல் புரோ வாலிபால் லீகில் மேலும் 2 அணிகள் சேர்க்கப்பட உள்ளன. அதோடு மகளிர் புரோ வாலிபால் போட்டியும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்றார் மிஸ்ரா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

சாலை விபத்தில் இருவா் பலத்த காயம்: மீண்டும் வேகத்தடை அமைக்கக் கோரிக்கை

சட்டைநாதா் கோயிலில் குருப்பெயா்ச்சி விழா

மத்திய பாதுகாப்பு படையினா், போலீஸாருக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் மே தின வாழ்த்து

வதான்யேஸ்வரா் கோயிலில் குருபெயா்ச்சி விழா

SCROLL FOR NEXT