செய்திகள்

ஐபிஎல் போட்டியில் அட்டகாசம்: நடிகை உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு

Raghavendran

ஐபிஎல் போட்டியில் அட்டகாசம் செய்தது தொடர்பாக பிரபல நடிகை உள்ளிட்ட 6 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

2019-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டத்தில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதின. இதில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

இந்நிலையில், ஹைதராபாத்தில் நடந்த இப்போட்டியின் போது மைதானத்தில் அட்டகாசம் செய்து, தன்னை ஆட்டத்தை பார்க்க விடமால் செய்ததாக ஹைதராபாத் போலீஸில் ஒருவர் புகார் அளித்தார். மேலும் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியும், மிரட்டல் விடுத்ததாகவும் அந்த புகாரில் தெரிவித்தார்.

இதையடுத்து பிரபல தெலுங்கு தொலைக்காட்சி நடிகை பிரஷாந்தி உள்ளிட்ட 6 பேர் மீது 341, 188 மற்றும் 506 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருவதாக ஹைதராபாத் போலீஸார் தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவு

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

ஷுப்மன் கில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்: டேவிட் மில்லர்

SCROLL FOR NEXT