செய்திகள்

10 ஆண்டுகளில் 20,000 சர்வதேச ரன்களை குவித்த முதல் வீரர் கோலி

DIN


10 ஆண்டுகளில் 20,000 சர்வதேச ரன்களை குவித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் கேப்டன் விராட் கோலி.
டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வகையான கிரிக்கெட் ஆட்டங்களிலும் மொத்தம் 20,502 ரன்களை குவித்துள்ள கோலி, கடந்த 10 ஆண்டுகளில் மட்டுமே 20, 018 ரன்களை குவித்துள்ளார்.
மே.இ.தீவுகளுக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் 43-ஆவது சதம் அடித்த போது இச்சிறப்பை பெற்றார் கோலி. 
கடந்த 2010-இல் டெஸ்ட் மற்றும் டி20 ஆட்டங்களில் அறிமுகமானார் கோலி. கடந்த 2008-இல் ஒருநாள் ஆட்டங்களில் அறிமுகமான அவர் அதற்கு முன்பே 484 ரன்களை எடுத்திருந்தார்.
ரிக்கி பாண்டிங் 18,962
கடந்த 2000-ஆம் ஆண்டில் ஆஸி. முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அதிகபட்சமாக 10 ஆண்டுகளில் 18,962 ரன்களை விளாசி இருந்தார். தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் ஜேக் காலிஸ் 16,777 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். இலங்கை ஜாம்பவான்கள் ஜெயவர்த்தனா 16,304, குமார் சங்ககரா 15,999 ரன்களுடன் அடுத்த இடங்களில் உள்ளனர்.
சச்சின் 15,962, திராவிட் 15,853 ரன்களுடன் உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

அழகிய தமிழ்மகள்...!

SCROLL FOR NEXT