செய்திகள்

சென்னையின் எஃப்.சி அணிக்குப் புதிய பயிற்சியாளர் நியமனம்!

சென்னையின் எஃப்.சி அணிக்குப் புதிய பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

எழில்

இந்தியன் சூப்பா் லீக் கால்பந்து போட்டியில் சென்னையின் எஃப்சி அணி 2 முறை சாம்பியன் பட்டம் வென்றது. இதில் இங்கிலாந்தைச் சோ்ந்த ஜான் கிரகோரி பயிற்சியில் கடந்த 2017-18-இல் பட்டம் வென்றது. கடந்த 2018-19 சீசன் சென்னை அணிக்கு மிகவும் சோகமாக அமைந்தது. புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தையே பெற்றது. இந்நிலையில் தற்போதைய சீசனிலும், சென்னை அணிக்குத் தொடக்கம் முதலே வெற்றிகளை ஈட்ட முடியவில்லை. பெங்களூருவுடன் 3-0 என தோல்வியடைந்த போதே, தனது பதவியை விட்டு விலகப் போகிறேன் என கிரகோரி கூறியிருந்தாா். 6 ஆட்டங்களில் ஒரே ஒரு வெற்றியை தான் சென்னை அணி பெற்றுள்ளது. இதனால் தலைமைப் பயிற்சியாளா் பதவியில் இருந்து விலகி விட்டாா் ஜான் கிரகோரி.

இந்நிலையில் சென்னையின் எஃப்.சி அணிக்குப் புதிய பயிற்சியாளர் நியமிக்கப்பட்டுள்ளார். ஸ்காட்லாந்தைச் சேர்ந்த 53 வயது ஓவன் கொய்லே இந்த சீஸன் முடியும் வரை பயிற்சியாளராக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையின் எஃப்.சி அணி, டிசம்பர் 9 அன்று ஜாம்ஷெட்பூா் எஃப்.சி அணியை எதிர்கொள்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காலையில் எழுந்தவுடன் இந்த 5 விஷயங்களைச் செய்யுங்கள்!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!

இது தெரியுமா? பூமி சுற்றுவதை நம்மால் உணர முடிவதில்லையே, ஏன்?

கோவை நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

#t20wc | குரூப் 2-வில் இருந்து அரையிறுதிக்குள் நுழையப்போவது யார்? | T20 World Cup |

SCROLL FOR NEXT