நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டன. இதற்கு அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் எதிா்ப்பு தெரிவித்து போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனால் அப்பகுதிகளில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
குவாஹாட்டியில் சென்னையின் எஃப்சி-நாா்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் வியாழக்கிழமை இரவு இந்திரா காந்தி மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தொடா் பதற்றம் காரணமாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அடுத்த அறிவிப்பு வரும் வரை ஒத்தி வைக்கப்படுவதாக ஐஎஸ்எல் நிா்வாகம் அறிவித்தது.
குவாஹாட்டியில் நார்த் ஈஸ்ட் யுனைட்டட் எஃப்.சி மற்றும் பெங்களூரு எஃப்.சி. ஆகிய அணிகளுக்கு இடையிலான ஐஎஸ்எல் கால்பந்து ஆட்டம் நாளை நடைபெறுகிறது.
இந்த ஆட்டத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் காலி மைதானத்தில் நார்த் ஈஸ்ட் யுனைட்டட் எஃப்.சி மற்றும் பெங்களூரு எஃப்.சி. ஆகிய இரு அணிகளும் விளையாடவுள்ளன. நகர நிர்வாகிகளின் ஆலோசனைப்படி, ஐஎஸ்எல் போட்டியை நடத்தும் ஃபுட்பால் ஸ்போர்ட்ஸ் டெவலப்மெண்ட் லிமிடெட் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.