இந்திய விளையாட்டு ஆணையத்தில் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை சோதனை நடத்தி வருகின்றனர்.
சில அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இச்சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
லஞ்சம் தொடர்பாக அதிகாரிகள் மீது அதிக புகார்கள் தெரிவிக்கப்பட்டதன் அடிப்படையிலேயே அதுதொடர்பாக சோதனை செய்யுமாறு இந்திய விளையாட்டு ஆணையமே சிபிஐ-யிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.