செய்திகள்

நீண்ட நாள் காதலியை கரம்பிடித்த முச்சத நாயகன்!

கிரிக்கெட் வீரர் கருண் நாயர், நீண்ட நாள்  காதலியை திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Raghavendran

கிரிக்கெட் வீரர் கருண் நாயர், நீண்ட நாள்  காதலியை திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய அணியின் இளம் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவராகத் திகழ்கிறார் கருண் நாயர் (27). இவர் 2016-ஆம் ஆண்டில் இங்கிலாந்து எதிராக சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முச்சதம் குவித்தவர் என்பது நினைவுகூரத்தக்கது. மேலும் வீரேந்திர சேவாக்குக்கு அடுத்து முச்சதம் விளாசிய 2-ஆவது இந்தியர் என்ற பெருமைக்குரியவர்.

இந்நிலையில், தனது நீண்ட நாள் காதலியான சனயா தகரிவாலா உடன் கருண் நாயருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதனை தனது சமூக வலைதளப்பக்கத்தின் மூலம் உறுதிபடுத்தினார்.

கர்நாடகத்தைச் சேர்ந்த கருண் நாயர், கடந்த ஐபிஎல் சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஸ்கர் தகுதிப் பட்டியலில் ஹோம்பவுண்ட்!

ஈரான், ஆப்கன், மியான்மர் உள்பட 20 நாட்டவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை! - அதிபர் டிரம்ப்

புது தில்லி போல சென்னையிலும் மூச்சுத் திணறும் நாள் வெகுதொலைவில் இல்லை!! செய்ய வேண்டியது?

ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்ட டாப் - 10 வீரர்கள்!

அரசுப் பேருந்தின் டயர் வெடிப்பு: பயணிகள் உயிர் தப்பினர்!

SCROLL FOR NEXT