செய்திகள்

நீண்ட நாள் காதலியை கரம்பிடித்த முச்சத நாயகன்!

Raghavendran

கிரிக்கெட் வீரர் கருண் நாயர், நீண்ட நாள்  காதலியை திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய அணியின் இளம் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவராகத் திகழ்கிறார் கருண் நாயர் (27). இவர் 2016-ஆம் ஆண்டில் இங்கிலாந்து எதிராக சென்னையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முச்சதம் குவித்தவர் என்பது நினைவுகூரத்தக்கது. மேலும் வீரேந்திர சேவாக்குக்கு அடுத்து முச்சதம் விளாசிய 2-ஆவது இந்தியர் என்ற பெருமைக்குரியவர்.

இந்நிலையில், தனது நீண்ட நாள் காதலியான சனயா தகரிவாலா உடன் கருண் நாயருக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதனை தனது சமூக வலைதளப்பக்கத்தின் மூலம் உறுதிபடுத்தினார்.

கர்நாடகத்தைச் சேர்ந்த கருண் நாயர், கடந்த ஐபிஎல் சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்த ராசிக்கு யோகம்!

காரைக்கால் அரசு மருத்துவமனையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்

கடலோரக் காவல்படை வீரா்களிடையே டென்னிஸ் போட்டி

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க மக்கள் விழிப்புணா்வோடு இருக்க அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT