செய்திகள்

ஒருவேளை மழை பெய்தால்! ஊழியர்களுக்கு அதற்கேற்ற மாதிரி ஊதியம் வழங்கப்படுமா? டக்வொர்த் லீவிஸை விளாசிய வீரு

Raghavendran

கிரிக்கெட் போட்டிகளின் போது மழை பெய்தால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி ஆட்டத்தின் அப்போதைய போக்கு மாற்றியமைக்கப்படுவது விதி. இதனடிப்படையில் பல அணிகளுக்கு அது சாதகமாகவும், பாதகமாகவும் அமைந்துவிடுகிறது. 

இதனால் டக்வொர்த் லீவிஸ் முறை மீது கிரிக்கெட் ரசிகர்கள் உட்பட பல வீரர்களுக்கு அதிருப்தி உண்டு. இதை அவ்வப்போது அவர்கள் வெளிப்படுத்திய நிகழ்வுகளும் ஏராளம்.

இந்தியா, நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டமும் மழையால் நிறுத்தப்பட்டது. மீதமுள்ள ஆட்டம் மறுநாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனிடையே குறிப்பிட்ட நேரம் கிடைத்தால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி போட்டி மாற்றியமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. 

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் அதிரடி தொடக்க வீரர் வீரேந்திர சேவாக் தனக்கே உரிய பாணியில் டக்வொர்த் லீவிஸ் முறையை ட்விட்டரில் விளாசினார். 

அதில், ஒருவேளை மழை பெய்தால்! ஊழியர்களுக்கு அதற்கொற்ற மாதிரி ஊதியம் வழங்கப்படுமா? அது அவர்களுக்கு சாதகமாக இருக்குமா? இதுகுறித்து ஒவ்வொரு நிறுவனங்களிலும் உள்ள மனிதவள மேம்பாட்டுப்பிரிவு அதிகாரிகள் கருத்து என்ன? என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகளுடன் பதிவிட்டு விமர்சித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜக வெற்றி பெற்றால் 2025 முதல் அமித் ஷாவே பிரதமர்: கேஜரிவால்

வாலாஜாப்பேட்டை அருகே தனியார் தொழிற்சாலை பேருந்து விபத்து: 18 தொழிலாளர்கள் படுகாயம்

வள்ளியூரில் ரயில்வே சுரங்கப் பாதையில் சிக்கிய அரசுப் பேருந்து: ஓட்டுநர் பணியிடை நீக்கம்

தங்கம் விலை அதிரடி உயர்வு: இன்றைய நிலவரம்

ஸ்லோவாகியா பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு: மோடி கண்டனம்

SCROLL FOR NEXT