செய்திகள்

ஐசிசி உலகக் கோப்பை லெவன் அணியில் பும்ரா, ரோஹித் சேர்ப்பு: கோலிக்கு இடமில்லை

DIN


ஐசிசி உலகக் கோப்பை லெவன் அணியில் இந்திய வீரர்கள் பும்ரா, ரோஹித் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அதே நேரம் கேப்டன் விராட் கோலி இடம் பெறவில்லை.
2019 ஒருநாள் உலகக் கோப்பையில் இங்கிலாந்து முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி சார்பில் உலக லெவன் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 
ஒவ்வொரு வீரர்களின் செயல்பாடு, திறமை அடிப்படையில் முன்னாள் வீரர்கள் இயான் பிஷப், இயான் ஸ்மித், இஷா குஹா, கிரிக்கெட் எழுத்தாளர் லாரன்ஸ் பூத், ஐசிசி பொதுமேலாளர் ஜெஃப் ஆலர்டைஸ் ஆகியோர் லெவன் அணியை தேர்வு செய்தனர்.
578 ரன்களுடன் தொடர் நாயகன் விருது பெற்ற கேன் வில்லியம்ஸன் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து வீரர்கள் ஜேஸன் ராய் (443), ஜோ ரூட் (556), பென் ஸ்டோக்ஸ் (465) ஜோப்ரா ஆர்ச்சர் 20 விக்கெட்டுகள்), இந்தியா தரப்பில் ரோஹித் சர்மா (648 ரன்கள்), ஜஸ்ப்ரீத் பும்ரா (18 விக்கெட்டுகள்), ஆஸ்திரேலியா தரப்பில் அலெக்ஸ் கரே விக்கெட் கீப்பர் (375 ), மிச்செல் ஸ்டார்க் (27 விக்கெட்டுகள்), வங்கதேச ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் (606 ரன்கள், 11 விக்கெட்டுகள்) , நியூஸி வீரர் லாக்கி பெர்குஸன் (21 விக்கெட்)ஆகியோர் லெவன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகையில் காங்கிரஸாா் சாலை மறியல்

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT