டோக்கியோவில் புதன்கிழமை நடைபெற்ற 2020 ஒலிம்பிக் வில்வித்தை தகுதி போட்டியில் இந்திய வீராங்கனை தீபிகா குமாரி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
முன்னாள் உலக சாம்பியனான தீபிகா குமாரி, கடந்த ஓராண்டாக பெரிய வில்வித்தை போட்டிகளில் சிறப்பாக செயல்படவில்லை. இந்நிலையில் வரும் 2020 டோக்கியோவில் நடக்கவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்கான முனைப்பில் உள்ளார்.
மகளிர் பிரிவில் கொரியாவின் ஆன் சனிடம் 29-25 என்ற புள்ளிக் கணக்கில் போராடி தோற்று வெள்ளிப் பதக்கம் வென்றார் தீபிகா.