செய்திகள்

புரோ கபடி: ஜெய்ப்பூர், ஹரியாணா அணிகள் வெற்றி

DIN


புரோ கபடி லீக் போட்டியின் ஒரு பகுதியாக திங்கள்கிழமை இரவு நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணி 42-23 என்ற புள்ளிக் கணக்கில் யு மும்பா அணியை வீழ்த்தியது.
ஜெய்ப்பூர் அணி தொடக்கம் முதலே ரைட், டிபன்ஸ் என அனைத்து அம்சங்களிலும் ஆதிக்கம் செலுத்தியது. முதல் பாதி முடிவிலேயே 22-9 என அபார முன்னிலை பெற்றது ஜெய்ப்பூர்.
அந்த அணி வீரர்கள் தீபக் ஹூடா சூப்பர் 10, தீபக் நர்வால் 6, நிதின் ராவல் 7 புள்ளிகளை சேர்த்தனர். அமித் ஹூடா தற்காப்பில் சிறப்பாக செயல்பட்டார். 
யு மும்பா அணியின் தற்காப்பு அரண் முற்றிலும் நிலைகுலைந்து போனதால், ஜெய்ப்பூர் வீரர்கள் எளிதாக புள்ளிகளை குவித்தனர்.
டோங் லியோன் லீ, அபிஷேக் சிங் இருவர் மட்டுமே மும்பா அணியை மீட்க போராடினர்.
ஹரியாணா-புணேரி பல்தான்: இரண்டாவதாக ஹரியாணா ஸ்டீலர்ஸ்-புணேரி பல்தான் அணிகளிடையே நடைபெற்ற ஆட்டத்தில் துவக்கம் முதலே ஹரியாணா ஆதிக்கம் செலுத்தியது. அதன் வீரர் நவீன் அபாரமாக செயல்பட்டு 8 புள்ளிகளை துரிதமாக குவித்தார். முதல் பாதி முடிவில் 22-10 என ஹரியாணா முன்னிலை பெற்றிருந்தது.
இரண்டாவது பாதியில் புணேரி பல்தான் வீரர்கள் போராடி ஆட்டத்தின் போக்கை தங்கள் பக்கம் திருப்ப முயன்றனர். ஆனால் அது பலன் தரவில்லை. இறுதியில் 34-24 என்ற புள்ளிக் கணக்கில் ஹரியாணா அணி வெற்றி பெற்றது. 
அந்த அணியின் வீரர் நவீன் குமார் ஒட்டுமொத்தமாக 14 புள்ளிகளை சேர்த்தார். விகாஸ் காலே, பர்வீன் ஆகியோர் தற்காப்பில் அரணாக செயல்பட்டு வெற்றியை தேடித்தந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT