பெடரர்-100
100-ஆவது ஏடிபி பட்டத்தை வென்று புதிய சாதனை படைத்துள்ளார் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர்.
100-ஆவது ஏடிபி பட்டத்தை வென்று புதிய சாதனை படைத்துள்ளார் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர்.
37 வயதான பெடரர் சுவிட்சர்லாந்தின் பேஸல் நகரில் கடந்த 1981 ஆகஸ்ட். 8-ஆம் தேதி பிறந்தார். சிறு வயது முதலே டென்னிஸ் விளையாட்டில் ஆர்வம் கொண்ட பெடரர் சொந்த ஊரான பேஸலில் நடைபெற்ற போட்டியில் பந்தை எடுத்து தரும் சிறுவனாகப் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
முதல் ஒற்றையர் வெற்றி: கடந்த 2001-இல் மிலன் உள்ளரங்க போட்டியில் முதல் ஒற்றையர் பிரிவு வெற்றி பதிவு செய்தார்.
2003-இல் நடைபெற்ற விம்பிள்டன் போட்டியில் முதன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றினார். 2004, 2006, 2007-இல் தொடர்ச்சியாக 3 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றார் பெடரர்.
தற்போது 7ஆவது நிலையில் உள்ள அவர், 310 வாரங்கள் உலகின் நம்பர் ஒன் வீரர் அந்தஸ்தை தக்க வைத்திருந்தார்.
20 கிராண்ட்ஸ்லாம், ஒலிம்பிக் தங்கம்: அவரது வெற்றிப் பட்டியலில் 8 விம்பிள்டன், 6 ஆஸ்திரேலிய ஓபன், 5 முறை தொடர்ச்சியாக யுஎஸ் ஓபன், ஒரு பிரெஞ்சு ஓபன் பட்டங்களும் இதில் அடங்கும். 30 முறை கிராண்ட்ஸ்லாம் போட்டி இறுதிக்கு முன்னேறிய வீரர் என்ற பெருமையும் அவர் வசம் உள்ளது. மேலும் 6 ஏடிபி பைனல்ஸ், 27 ஏடிபி வேர்ல்ட் டூர் மாஸ்டர்ஸ் 1000, 21 ஏடிபி வேர்ல்ட் டூர் 500 பட்டங்களையும் வென்றுள்ளார்.
2017, 2018 ஆண்டுகளில் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பினார். 2018-ஆஸி ஓபன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதின் மூலம் 20-ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையை படைத்தார். இதன் மூலம் உலகின் நம்பர் ஒன் இடத்தை மீண்டும் பெற்றார்.
100-ஆவது பட்டம்: தனது 20 ஆண்டுக்கால டென்னிஸ் வாழ்க்கையில் 100-ஆவது பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். துபையில் நடைபெற்ற ஏடிபி போட்டி இறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில் அவர் 6-2, 6-2 என்ற நேர்செட்களில் பி.கோரிக்கை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறினார்.
சனிக்கிழமை இரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் கிரேக்க வீரர் சிட்ஸிபாûஸ 6-4, 6-4 என நேர்செட்களில் வென்று தனது 100-ஆவது பட்டத்தை வென்ற சாதனையை நிகழ்த்தினார்.
இதற்கு முன்பு ஜிம்மி கானர்ஸ் மட்டுமே 109 பட்டங்களை வென்ற வீரர் என்ற சிறப்பைப் பெற்றுள்ளார்.