செய்திகள்

ஏடிபி தரவரிசை 3-ஆவது இடத்தில் பெடரர்

DIN


ஏடிபி தரவரிசையில் 3-ஆவது இடத்துக்கு முன்னேறினார் ஜாம்பவான் ரோஜர் பெடரர். 
20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற பெடரர், 3 ஆண்டுகள் கழித்து களிமண் தரை மைதான போட்டிகளில் பங்கேற்க உள்ளார். முதன்முறையாக மாட்ரிட் ஓபன் போட்டியில் ஆட உள்ளார்.
திங்கள்கிழமை வெளியான ஏடிபி தரவரிசைப் பட்டியலில் பெடரர் மூன்றாவது இடத்துக்கு முன்னேறி உள்ளார்.
அந்த இடத்தில் இருந்த அலெக்சாண்டர் வெரேவ் மியூனிக் ஓபன் போட்டி காலிறுதியில் தோல்வியுற்றதால், நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டார். 250-ஆவது வாரமாக முதலிடத்தில் உள்ளார் செர்பியாவின் ஜோகோவிச். இரண்டாவது இடத்தில் நடால் உள்ளார். கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் 9-ஆவது இடத்துக்கு முன்னேறினார்.
மகளிர் டபிள்யுடிஏ தரவரிசையில் ஜப்பானின் நவோமி ஒஸாகா முதலிடத்திலும், செக குடியரசு பெட்ரா குவிட்டோவா இரண்டாவது, ருமேனியாவின் சிமானோ ஹலேப் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

SCROLL FOR NEXT