செய்திகள்

இந்தியா ஓபன்: அரையிறுதியில் மேரிகோம், நிஹாத் மோத வாய்ப்பு

DIN

இந்திய ஓபன் குத்துச்சண்டை போட்டி அரையிறுதிச் சுற்றில் உலக சாம்பியன் மேரி கோம்}சக வீராங்கனை நிஹாத் ஜரீனுடன் மோதும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் 10 இந்திய வீரர்கள் பதக்க வாய்ப்பை உறுதி செய்துள்ளனர்.
குவாஹாட்டியில் இரண்டாவது இந்தியா ஓபன் போட்டி திங்கள்கிழமை தொடங்கியது.  இதில் ஆசிய போட்டி தங்கப்பதக்க வீரர் அமித் பங்கால் (52 கிலோ) எளிதாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவார் எனத் தெரிகிறது. அதே போல் 6 ஆடவர், 4 மகளிர் என 10 இந்திய வீரர்கள் அரையிறுதிக்கு எளிதாக நுழைவதால், பதக்க வாய்ப்பை உறுதி செய்துள்ளனர். 81 கிலோ அரையிறுதியில் பிரிஜேஷ் யாதவ், சஞ்சய், 75 கிலோ பிரிவில் பாக்கியபதி கச்சாரி, ஸ்வீட்டி போரா ஆகியோர் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளனர். 56 கிலோ ஆடவர் பிரிவில் கவிந்தர் சிங், முகமது ஹுஸமுதீன், கெüரவ் பிதுரி, ஆகியோரும் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

இருதரப்பினரிடையே கடும் மோதல்: கடைகளுக்கு தீ வைப்பு - போலீஸார் குவிப்பு!

SCROLL FOR NEXT