செய்திகள்

ஐபிஎல் போட்டியில் இனி தொடக்க விழா கிடையாது: உயரதிகாரக் குழுக் கூட்டத்தில் முடிவு!

கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடக்க விழாவில் ஆர்வம் காட்டுவது கிடையாது...

எழில்

மும்பையில் ஐபிஎல் சோ்மன் பிரிஜேஷ் பட்டேல் தலைமையில் ஐபிஎல் உயரதிகாரக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. முந்தைய தொடா்களில் நோ பால்கள் கணிப்பதில் நடுவா்கள் செயல்பாடுகள் விமா்சனத்துக்கு ஆளாகின. இப்பிரச்னை தொடா்பாக குழுக் கூட்டத்தில் முழுமையாக விவாதிக்கப்பட்டது. ஐபிஎல் 2020 சீசன் தொடரில் நோ பால்களைக் கண்காணிக்க சிறப்பு நடுவரை நியமிக்க அதன் உயரதிகாரக் குழு முடிவு செய்துள்ளது. 

மேலும் அடுத்த வருடத்திலிருந்து ஐபிஎல் தொடக்க விழாவை ரத்து செய்யவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடக்க விழாவில் ஆர்வம் காட்டுவது கிடையாது. தொடக்க விழாவில் கலந்துகொள்ளும் பிரபலங்களுக்கு அதிகச் சம்பளம் தரவேண்டியுள்ளது. இப்படித் தொடக்க விழாவுக்காகச் செலவு செய்வதன் மூலம் ஏராளமான பணமும் வீணாகிறது. இக்காரணங்களால் இனிமேல் ஐபிஎல் போட்டியில் தொடக்க விழாவை நடத்த வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று பிசிசிஐ நிர்வாக அதிகாரி ஒருவர், ஆங்கில நாளிதழுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

#t20wc | இந்தியா அரையிறுதி செல்ல இதெல்லாம் நடக்குமா? | T20 World Cup |

1952: தேர்தல் முடிவுகள் வெளியாகி இரு மாதங்களுக்குப் பின் பதவியேற்ற காங்கிரஸ் அமைச்சரவை!

சுபசெலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!

அரையிறுதிக்கு முன்னேறப் போவது யார்? தெ.ஆப்பிரிக்காவை சந்திக்கும் மேற்கிந்தியத் தீவுகள்!

SCROLL FOR NEXT