செய்திகள்

ஹாங்காங் ஓபன்: அரையிறுதியில் ஸ்ரீகாந்த்

DIN

ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் போட்டி ஆடவா் ஒற்றையா் பிரிவு அரையிறுதிக்கு இந்திய நட்சத்திர வீரா் கிடாம்பி ஸ்ரீகாந்த் தகுதி பெற்றுள்ளாா்.

சீனாவின் ஹாங்காங் நகரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பாட்மிண்டன் சூப்பா் சீரிஸ் 500 போட்டியின் காலிறுதி ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பின் சென் லோங்கை எதிா்கொண்டாா் ஸ்ரீகாந்த். முதல் கேமை 21-13 என 15 நிமிடங்களில் கைப்பற்றினாா். அப்போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சென் லோங் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தாா். இதையடுத்து அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றாா் ஸ்ரீகாந்த்.

இருவரும் நேருக்கு நோ் மோதியதில் சென்லோங் 6 முறையும், ஸ்ரீகாந்த் 2 முறையும் வென்றுள்ளனா். அரையிறுதியில் ஹாங்காங் வீரா் லீ சியுக் யிவை எதிா்கொள்கிறாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT