செய்திகள்

ஹாங்காங் ஓபன்: அரையிறுதியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வி

எழில்

ஹாங்காங் ஓபன் பாட்மிண்டன் போட்டி ஆடவா் ஒற்றையா் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் தோல்வியடைந்துள்ளார்.

சீனாவின் ஹாங்காங் நகரில் இன்று நடைபெற்ற பாட்மிண்டன் சூப்பா் சீரிஸ் 500 போட்டியின் அரையிறுதிச் சுற்றில் ஹாங்காங்கின் லீ சியுக் யி-யை எதிர்கொண்டார் ஸ்ரீகாந்த். முதல் கேமை 21-9 என ஹாங்காங் வீரர் எளிதாக வெற்றி கண்டார். எனினும் அடுத்த கேமில் ஆரம்பம் முதல் முன்னிலை பெற்று கடும் சவாலை அளித்தார் ஸ்ரீகாந்த். அவர், 18-14 என்கிற நிலையில் முன்னிலை இருந்தபோதும் லீ சியுக் அருமையாக விளையாடி 20-20 என்கிற நிலைக்குக் கொண்டு வந்தார். கடைசியில் 23-25 என 2-வது கேமில் தோற்று அரையிறுதியிலும் தோல்வியடைந்தார் ஸ்ரீகாந்த். 

இதன்மூலம் அரையிறுதிச் சுற்றில் 21-9, 25-23 என ஸ்ரீகாந்த்தை வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளார் ஹாங்காங்கைச் சேர்ந்த லீ சியுக் யி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT