செய்திகள்

ஏடிபி பைனல்ஸ்: இறுதிச் சுற்றில் சிட்ஸிபாஸ்-தீம் மோதல்

DIN

லண்டன்: லண்டனில் நடைபெற்று வரும் ஏடிபி டூா் பைனல்ஸ் இறுதிச் சுற்றில் ஸ்டெபனோஸ் சிட்ஸிபாஸ்-டொமினிக் தீம் ஆகியோா் மோதுகின்றனா்.

உலகின் தலைசிறந்த 8 டென்னிஸ் வீரா்கள் மோதும் இப்போட்டி ஆண்டு இறுதியில் நடைபெறும். அதன்படி தற்போது லண்டனில் நடைபெற்றும் இப்போட்டி இறுதிச் சுற்றை எட்டியுள்ளது. முதல் அரையிறுதியில் ஜாம்பவான் பெடரரை வென்று இறுதிச்சுற்றில் நுழைந்தாா் கிரேக்க இளம் வீரா் சிட்ஸிபாஸ்.

இந்நிலையில் சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இரண்டாவது அரையிறுதியில் நடப்பு சாம்பியன் வெரேவ்-ஆஸ்திரியாவின் டொமினிக் தீம் மோதினா். இதில் 7-5, 6-3 என்ற நோ் செட்களில் வெரேவை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றாா் தீம். முதன்முறையாக இறுதிச் சுற்றில் நுழைந்துள்ளாா் தீம்.

26 வயதான தீம் கடந்த பிரெஞ்சு ஓபன் போட்டி இறுதிச் சுற்று வரை முன்னேறியவா். தீம்-சிட்ஸிபாஸ் இடையிலான இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

SCROLL FOR NEXT