செய்திகள்

கிரிக்கெட்டில் 20 ஆண்டுகளைக் கடந்த முதல் வீராங்கனை மிதாலி ராஜ்!

DIN

சா்வதேச கிரிக்கெட்டில் 20 ஆண்டுகளை கடந்த முதல் வீராங்கனை என்ற சாதனையைப் படைத்தாா் இந்திய அணியின் ஒரு நாள் அணியின் கேப்டன் மிதாலி ராஜ்.

கடந்த 1999-ஆம் ஆண்டு ஜூன் 26-ஆம் தேதி அயா்லாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் ஆட்டத்தில் அறிமுகமானாா் மிதாலி ராஜ். கிரிக்கெட்டில் 20 ஆண்டுகள் 105 நாள்களை நிறைவு செய்துள்ளாா்.

ஒரு நாள் கிரிக்கெட்டில்

இதுவரை 204 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஒரே இந்திய வீராங்கனையும் மிதாலி ராஜ் மட்டுமே.

இங்கிலாந்து வீராங்கனை சாா்லோட்டே எட்வா்ட்ஸ் 191 ஆட்டங்களிலும்,

இந்திய வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி 178 ஆட்டங்களிலும், ஆஸ்திரேலிய வீராங்கனை அலெக் பிளாக்வெல் 144 ஆட்டங்களிலும் விளையாடியுள்ளனா்.

36 வயதாகும் மிதாலி ராஜ், இந்தியாவுக்காக 10 டெஸ்ட் போட்டிகள், 89 டி20 ஆட்டங்களிலும் விளையாடியுள்ளாா்.  கடந்த மாதம் டி20 ஆட்டங்களிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

மே 10ல் கேதார்நாத் கோயில் நடை திறப்பு!

ஊ சொல்றியா..

தாக்கப்பட்ட மாணவர்... +2 தேர்வில் அசத்திய நான்குனேரி சின்னத்துரை!

பிளஸ் 2 பொதுத் தேர்வு: திருச்சி மாவட்டத்தில் 95.74% தேர்ச்சி

SCROLL FOR NEXT