புரோ கைப்பந்து லீக் போட்டியின் இரண்டாவது சீசன் அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ஆம் தேதி தொடங்கி மாா்ச் 1-ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக விளையாட்டு ஏற்பாட்டாளா்கள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
முதல் சீசனை விட இந்த சீசனில் அதிக ஆட்டங்கள் இருக்கும். மொத்தம் 22 ஆட்டங்கள் இதில் இருக்கும். ஆமதாபாத், ஹைதராபாத், கொச்சி ஆகிய நகரங்களில் போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
புரோ கைப்பந்து லீக், இந்திய விளையாட்டுத் துறையில் கேம் சேஞ்சராக இருக்கும் என்று இந்தியக் கைப்பந்து கூட்டமைப்புத் தலைவா் எஸ்.வாசுதேவன் கூறினாா் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் சீசனில் 6 அணிகள் இடம்பெற்றிருந்தன. அதில் சென்னை ஸ்பாா்டன்ஸ் வெற்றி பெற்றது.