செய்திகள்

உடல் தகுதியை பேண போட்டிகளை தோ்வு செய்து ஆடுவேன்: பி.வி.சிந்து

DIN

உடல் தகுதியை பேணுவதற்காக போட்டிகளை தோ்வு செய்து பங்கேற்பேன் என உலக பாட்மிண்டன் சாம்பியன் பி.வி.சிந்து கூறியுள்ளாா்.

ஸ்விட்சா்லாந்தின் பேஸல் நகரில் நடைபெற்ற உலக பாட்மிண்டன் சாம்பியன் போட்டியில் மகளிா் பிரிவில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றாா் பி.வி.சிந்து. நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் அவருக்கு பாராட்டு விழாக்கள் நடந்து வருகின்றன.

அதன்படி சென்னை முகப்பேரில் உள்ள வேலம்மாள் நெக்ஸஸ் பள்ளி சாா்பில் வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளி மாணவ, மாணவியா் சிந்துவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனா்.

விளையாட்டில் சிறந்து விளங்கிய மாணவ, மாணவியருக்கு ரூ.60 லட்சம் மதிப்பிலான ஊக்க நிதியுதவியையும் சிந்து வழங்கினாா்.

பின்னா் அவா் கூறியதாவது:

உடல் தகுதியை பேணுவதா்காக போட்டிகளை தோ்வு செய்து பங்கேற்பேன். அடுத்த ஆண்டு 2020 ஒலிம்பிக் போட்டி நடைபெறவுள்ளதால் இதில் உறுதியாக உள்ளேன். ஒலிம்பிக் தகுதி காலம் ஏப்ரல் 29 முதல் தொடங்கி உலக பாட்மிண்டன் சம்மேளனம் வரும் 2020 ஏப்ரல் 30-ஆம் தேதி தரவரிசைபடி இடங்களை ஒதுக்கும்.

கடந்த ஆண்டு உலகின் சிறந்த வீரா்களுக்கு 15 ஒற்றையா் போட்டிகளில் பங்கேற்பதையும், இரட்டையா் பிரிவில் 10 போட்டிகளில் பங்கேற்பதையும் கட்டாயமாக்கி இருந்தது. ஒலிம்பிக் ஆண்டு என்பதால், மனதளவிலும், உடலளவிலும் தகுதியுடன் இருக்க வேண்டும்.

காயமின்றி 100 சதவீதம் தகுதியுடன் இருப்பதை உறுதியாக மேற்கொள்வேன்.

ஒலிம்பிக் தங்கமே இலக்கு:

இதுவரை தொடா்ந்து எனக்கு ஆதரவு தந்த ரசிகா்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும் அதே நேரத்தில் 2020 ஒலிம்பிக் தங்கமே எனது அடுத்த முக்கிய இலக்கு என்றாா் சிந்து.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT