புது தில்லியில் உள்ள டாக்டர் கர்னி சிங் துப்பாக்கி சுடும் மையத்தில் இரு உறுப்பினர்கள் இடையே நடைபெற்ற கைகலப்பு தொடர்பாக விசாரணை நடத்த இந்திய ரைஃபிள் சம்மேளனம் உத்தரவிட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவுடன் நடைபெற்று வரும் 3-ஆவது டெஸ்டில் அறிமுகமான இந்திய லெக் ஸ்பின்னர் ஷாபாஸ் நதீம், 3 பந்துகளை வீசிய பின்தான் தனது பதட்டம் தணிந்தது எனக் கூறியுள்ளார். உள்ளூர் கிரிக்கெட்டில் தனக்குள்ள நீண்ட அனுபவமும் இதற்கு உதவியது எனவும் தெரிவித்தார்.
ஐபிஎல் அணிகளில் ஒன்றான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஆஸி. முன்னாள் ஆல் ரவுண்டர் ஆன்ட்ரு மெக் டொனால்ட் நியமிக்கப்பட்டுள்ளார். லீசெஸ்டர், விக்டோரியா, மெல்போர்ன் ரென்கேட்ஸ் அணிகளின் பயிற்சியாளராகவும் அவர் பணிபுரிந்துள்ளார்.