தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டெஸ்டில் 1 இன்னிங்ஸ் மற்றும் 202 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 3-0 என தொடரையும் முழுமையாக வென்றது இந்தியா. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அணிகள் பட்டியலில் 240 புள்ளிகளுடன் இந்தியா எட்ட முடியாத முன்னிலையுடன் முதலிடத்தில் உள்ளது. 5 டெஸ்ட் ஆட்டங்களில் 240 புள்ளிகளை குவித்துள்ளது இந்தியா. நியூஸிலாந்து, இலங்கை அணிகள் 60 புள்ளிகளுடன் 2 மற்றும் 3ஆவது இடங்களில் உள்ளன. அடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் ஒரு பகுதியாக வங்கதேசத்துடன் 2 டெஸ்ட் தொடரில் ஆடுகிறது இந்தியா.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி முன்னணியில் இருப்பது குறித்து முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே ஒரு பேட்டியில் கூறியதாவது:
கிரிக்கெட் உலகில் இந்திய கிரிக்கெட் அணி ஆதிக்கம் செலுத்தும் என்றே நம்புகிறேன். மூன்று வருடங்களுக்கு முன்பு நான் பயிற்சியாளராக இருந்தபோதே இந்த அணியால் கிரிக்கெட் உலகை ஆள முடியும் என்று தெரிவித்திருந்தேன். அதைத்தான் தற்போது இந்திய அணி செய்துள்ளது. அணியில் விளையாடும் 11 வீரர்கள் மட்டுமல்லாமல், இதர வீரர்களும் மிகவும் திறமையானவர்களாக உள்ளார்கள். யார் அணிக்குள் உள்ளே வந்தாலும் சிறப்பாக விளையாடுகிறார்கள். ஷபாஸ் நதீமின் அறிமுகத்தைப் பாருங்கள். கடைசி நேரத்தில் கிடைத்த வாய்ப்பில் அணிக்காக அருமையாகப் பங்காற்றியுள்ளார். கூடுதலாக உள்ள வீரர்களிடமிருந்து இதுதான் நீங்கள் எதிர்பார்ப்பீர்கள். இது அணிக்கு மிகவும் நல்லது. அதனால் தான் இந்த அணி உள்ளூரில் மட்டுமல்லாமல் வெளிநாட்டிலும் ஆதிக்கம் செலுத்தும் என நான் நம்புகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.