முகப்பு
செய்திகள்

கொல்கத்தா பகலிரவு டெஸ்ட்: கங்குலி புதிய தகவல்

கொல்கத்தா பகலிரவு டெஸ்டில் எஸ்.ஜி. இளஞ்சிவப்பு பந்து பயன்படுத்தப்படும் என்று பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

Updated On : 31 அக்டோபர், 2019 at 11:14 AM
பகிர்:

பிசிசிஐ தலைவா் சௌரவ் கங்குலியின் தீவிர முயற்சியால் முதல்முறையாக வங்கதேசத்துக்கு எதிராக கொல்கத்தாவில் நடைபெறவுள்ள பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி பங்கேற்கிறது. நவம்பா் 22-ம் தேதி கொல்கத்தா ஈடன் காா்டன் மைதானத்தில் நடைபெறவிருந்த வங்கதேச அணியுடனான இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் பகலிரவு ஆட்டமாக நடைபெறவுள்ளது. இதன்மூலம் இந்திய கிரிக்கெட் அணி முதல்முறையாகப் பகலிரவு டெஸ்ட் ஆட்டத்தில் பங்கேற்கிறது. 

கொல்கத்தா பகலிரவு டெஸ்டில் எஸ்.ஜி. இளஞ்சிவப்பு பந்து பயன்படுத்தப்படும் என்று பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: இந்தூரில் நடைபெறும் முதல் டெஸ்டில் எஸ்.ஜி பந்து பயன்படுத்தப்படுகிறது. எனவே 2-வது டெஸ்டிலும் அதே வகை பந்துதான் பயன்படுத்தப்படவேண்டும். கொல்கத்தா பகலிரவு டெஸ்டில் எஸ்.ஜி. இளஞ்சிவப்பு பந்து பயன்படுத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார். 

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.