இந்தோனேஷியாவின் யோக்யகர்தா நகரில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் ஆசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சரத், சத்யன்,மனிகா பத்ரா உள்ளிட்டோர் அடங்கிய 10 பேர் கொண்ட இந்திய அணி கலந்து கொள்கிறது.
2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிச் சுற்று ஆட்டமாக இப்போட்டி அமைந்துள்ளது. 10 பேர் அணியில் 5 ஆடவர், 5 மகளிர் இடம் பெற்றுள்ளனர். இப்போட்டிக்காக சீனாவின் செங்டு நகரில் 10 நாள்கள் தீவிர பயிற்சி முகாமில் இந்திய அணி கலந்து கொண்டது.
ஜப்பான், கொரியா, தைபே, சிங்கப்பூர் நாடுகளின் சிறந்த வீரர்களுடன் இந்திய ஆடவர் அணியின் சரத் கமல், சத்யன் ஞானசேகரன் மோத உள்ளனர்.
மகளிர் பிரிவில் மனிகா பத்ரா ஒற்றையர் பிரிவிலும், இரட்டையர் பிரிவில் மதுரிகா பட்கருடனும் இணைந்து ஆட உள்ளார்.
அதன் தொடர்ச்சியாக ஆசிய டேபிள் டென்னிஸ் யூனியன் பொதுக்குழு கூட்டத்தில் டிடிஎப்ஐ பொதுச் செயலர் எம்.சிங், பொருளாளர் அருண்குமார் பானர்ஜி கலந்து கொள்கின்றனர்.
ஆடவர்: மானவ் தாக்கர், அந்தோணி அமல்ராஜ், ஜி.சத்யன், ஹர்மீத் தேசாய், சரத்கமல்,
மகளிர்: சுதிர்தா முகர்ஜி, மதுரிகா பட்கர், அயிஹிகா முகர்ஜி, மனிகா பத்ரா, அர்ச்சனா காமத்.