செய்திகள்

உலக ஆடவர் குத்துச்சண்டை அரையிறுதியில் அமித் பங்கால், மணிஷ்

உலக ஆடவர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி அரையிறுதிக்கு இந்தியாவின் அமித் பங்கால், மணிஷ் கெளஷிக் தகுதி பெற்றுள்ளனர்

DIN

உலக ஆடவர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி அரையிறுதிக்கு இந்தியாவின் அமித் பங்கால், மணிஷ் கெளஷிக் தகுதி பெற்றுள்ளனர்.
ஆசிய சாம்பியன் அமித் பங்கால் 52 கிலோ பிரிவில் 4-1 என்ற புள்ளிக் கணக்கில் பிலிப்பைன்ஸின் கார்லோ பாலத்தை வீழ்த்தி அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார். ஏற்கெனவே ஜகார்த்தா ஆசியப் போட்டி அரையிறுதியிலும் கார்லோவை வீழ்த்தியிருந்தார் அமித்.
மற்றொரு ஆட்டத்தில் 63 கிலோ பிரிவில் இந்தியாவின் மணிஷ் கெளஷிக் 5-0 என்ற புள்ளிக்கணக்கில் பிரேசில் வீரரை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.
இதன் மூலம் இருவரும் குறைந்தது ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளனர். மற்றொரு வீரரான சஞ்சித் 91 கிலோ பிரிவில் 1-4 என டோரஸிடம் தோல்வியுற்று வெளியேறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

SCROLL FOR NEXT