செய்திகள்

தேசிய கார் பந்தயம் 3ஆவது சுற்று

DIN

கோவையில் நடைபெற்ற ஜே.கே.டயர் தேசிய கார் பந்தயத்தின் மூன்றாம் சுற்றுப்போட்டிகளில் நோவிஸ் கோப்பை பிரிவில் முகமது ரயான், மோட்டார் சைக்கிள் பிரிவான சுசூகி ஜிக்சர் கோப்பை பிரிவில் தனே கெய்க்வாட் ஆகியோர் முதலிடத்தைப் பிடித்தனர். 

22-ஆவது தேசிய அளவிலான கார், இருசக்கர வாகனப் பந்தயம் கோவை, செட்டிபாளையத்தில் உள்ள கரி மோட்டார் ஸ்பீடுவேயில் கடந்த ஜூலை மாதம் தொடங்கின. இரண்டாவது சுற்றுப் போட்டிகள் ஆகஸ்ட் இறுதியில் நடைபெற்ற நிலையில், மூன்றாம் சுற்றுப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன. 

இதில் ஜே.கே.டயர் சுசூகி ஜிக்சர் கோப்பை மோட்டார் சைக்கிள் பந்தயப் போட்டியில் புணேவைச் சேர்ந்த தனே கெய்க்வாய்ட் முதலிடத்தைப் பிடித்தார். ஜே.கே.டயர் நேவிஸ் கோப்பை (பந்தயம் 1) மற்றும் ஜே.கே.டயர் நேவிஸ் கோப்பை (பந்தயம் 2) போட்களில் முகமது ரயான் முதலிடத்தைப் பிடித்தார்.

ஜே.கே.டயர் சுசூகி ஜிக்சர் கோப்பை (பந்தயம் 1) போட்டியில் தனே கெய்க்வாட்டும், எல்.ஜி.பி. பார்முலா 4 கார் பந்தயத்தில் தில்ஜித் முதல் இடத்தையும் பிடித்தனர். இப்போட்டிகளில் சென்னை, கோவை, மும்பை உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த வீரர்கள் கலந்துகொண்டனர். மூன்றாவது சுற்றுப்போட்டிகள் ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

சிசோடியா ஜாமீன் மனு: சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு!

‘ஆவேஷம்’ பட டிரெண்டிங்கில் இணைந்த பாட் கம்மின்ஸ்!

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 6 இல் வெளியாகும்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

SCROLL FOR NEXT