முகப்பு
செய்திகள்

தனது 2 வருட சம்பளத்தை நிவாரணத் தொகையாக அளித்தார் கெளதம் கம்பீர்

கரோனா தடுப்புப் பணிகளுக்காகத் தனது இரண்டு வருட சம்பளத்தை நிவாரணத் தொகையாக வழங்கியுள்ளார் முன்னாள் வீரர் கெளதம் கம்பீர்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:20 PM
பகிர்:

கரோனா தடுப்புப் பணிகளுக்காகத் தனது இரண்டு வருட சம்பளத்தை நிவாரணத் தொகையாக வழங்கியுள்ளார் முன்னாள் வீரர் கெளதம் கம்பீர்.  

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. கரோனா வைரஸால் உலகம் முழுக்க 47,000 மக்கள் இறந்துள்ளார்கள். கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் தொடங்கிய ஊரடங்கு, ஏப்ரல் 14-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். கரோனா வைரஸ் சூழல் தொடா்பாக நாட்டு மக்களுக்கு ஒரே வாரத்தில் 2-ஆவது முறையாக உரையாற்றியபோது இந்த அறிவிப்பை வெளியிட்ட பிரதமா் மோடி, அந்த நோய்த் தொற்றுக்கு எதிரான உறுதியான போரில் இது மிக அவசியமான நடவடிக்கை என்று கூறியுள்ளாா். இந்தியாவைப் பொறுத்தவரை இதுவரை 2000 பேருக்கு மேல் இந்த வைரஸின் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கரோனா தடுப்புப் பணிகளுக்காகத் தனது இரண்டு வருட சம்பளத்தை நிவாரணத் தொகையாக வழங்கியுள்ளார் முன்னாள் வீரர் கெளதம் கம்பீர். இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் கூறியதாவது:

நாடு நமக்கு என்ன செய்தது எனக் கேட்கிறார்கள். நிஜமான கேள்வி, நீ நாட்டுக்கு என்ன செய்தாய் என்பதுதான். என்னுடைய இரண்டு வருட சம்பளத்தை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்குகிறேன் என்று கூறியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →