செய்திகள்

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு செல்லும் முன்பு சென்னையில் பயிற்சி பெறும் தோனி, ரெய்னா!

DIN

இந்த வருட ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. செப்டம்பர் 19 (சனிக்கிழமை) அன்று தொடங்கும் ஐபிஎல் போட்டி நவம்பர் 10 (செவ்வாய்) அன்று முடிவடைகிறது. 53 நாள்கள் போட்டி நடைபெறுகிறது.

இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் சென்னையில் சில நாள்களுக்குப் பயிற்சியில் ஈடுபடவுள்ளார்கள். தோனி, ரெய்னா உள்ளிட்ட சிஎஸ்கே வீரர்கள் சென்னையில் பயிற்சியில் ஈடுபட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தனி விமானம் மூலம் தோனி, ரெய்னா, அம்பட்டி ராயுடு, ஹர்பஜன் சிங், பியூஷ் சாவ்லா போன்ற வீரர்கள் ஆகஸ்ட் 14 அன்று சென்னைக்கு வருகிறார்கள். ஒருநாள் கழித்து அனைவரும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபடவுள்ளார்கள். பிறகு, சிஎஸ்கே வீரர்கள் சென்னையிலிருந்து துபைக்கு ஆகஸ்ட் 21 அன்று செல்லவுள்ளார்கள். 

சென்னைக்கு வரவுள்ள சிஎஸ்கே வீரர்கள் தங்கள் சொந்த ஊரிலேயே கரோனா பரிசோதனை மேற்கொள்கிறார்கள். கரோனா இல்லை என்பது உறுதியானால் மட்டுமே அவர்கள் சென்னைக்கு வரவேண்டும் என்று கட்டளையிடப்பட்டுள்ளது. இதனால் சென்னைக்கு வந்திறங்கும் வீரர்களைத் தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லாமல் நேரடியாக அவர்கள் பயிற்சியில் ஈடுபடவுள்ளார்கள்.

சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகள் மட்டுமே ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் செல்லும் முன்பு இந்தியாவில் பயிற்சி முகாமை நடத்துகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

முடிவுக்கு வந்தது 1000 எபிசோடுகளைக் கடந்த பிரபல தொடர்!

தேர்தல் ஆணையம் 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்க வேண்டும்: எல்.முருகன்

அதிர்ச்சியளிக்கும் அல்லு அர்ஜுன் சம்பளம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

SCROLL FOR NEXT