செய்திகள்

ஒருநாள் தொடர்: ரிஷப் பந்தை நீக்கிவிட்டு விக்கெட் கீப்பராகிறாரா கே.எல். ராகுல்?

இப்போதைக்கு ரிஷப் பந்த் தான் எங்களுடைய முதன்மையான விக்கெட் கீப்பர்...

எழில்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை முதல் தொடங்கவுள்ளது. 

இந்நிலையில் முதல் ஒருநாள் ஆட்டத்தில் ரோஹித் சர்மா, கே.எல். ராகுல், ஷிகர் தவன் ஆகிய மூவரும் விளையாட விளையாட வாய்ப்புள்ளதாக கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

இதனால் இந்திய அணியில் சில மாற்றங்கள் ஏற்படும் எனத் தெரிகிறது. இந்திய அணியில் ஜடேஜா, ஜாதவ் ஆகிய இருவரும் கடைசி ஓவர்களில் பேட்டிங் செய்ய தேவைப்படுவதால் ரிஷப் பந்த் நீக்கப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கே.எல். ராகுலை விக்கெட் கீப்பராக்கிவிட்டால் ரோஹித் சர்மா, கே.எல். ராகுல், ஷிகர் தவன் ஆகிய மூவரும் இந்திய அணியில் இடம்பெறமுடியும். கூடவே ஜடேஜா, ஜாதவும் அணியில் பங்கேற்று பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் பங்களிக்க முடியும். இதனால் தான் ரோஹித் சர்மா, கே.எல். ராகுல், ஷிகர் தவன் ஆகிய மூவரும் விளையாட விளையாட வாய்ப்புள்ளதாக கோலி பேட்டியளித்தார் என அறியப்படுகிறது.

இதுகுறித்து இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ராத்தோர் கூறியதாவது: ராகுலை விக்கெட் கீப்பராகவும் செயல்பட வைப்பது குறித்து நாங்கள் யோசிக்கவில்லை. இப்போதைக்கு ரிஷப் பந்த் தான் எங்களுடைய முதன்மையான விக்கெட் கீப்பர். ராகுலும் கீப்பிங் செய்ய முடியும். அணிக்குத் தேவைப்படும்போது அதைப் பயன்படுத்திக்கொள்வோம் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மீண்டும் மகாபாரதம்! நாள்தோறும் காலை ஒருமணி நேரம் ஒளிபரப்பாகிறது!

பெத் மூனி அதிரடி: இந்தியாவை வீழ்த்தி ஆஸி. அபார வெற்றி!

எம். ஆர். ராதா மகள் என்பதை நிரூபித்திருக்கிறேன்: ராதிகா சரத்குமார்

புதிய தொடரில் மீண்டும் ஜோடி சேரும் பாக்கியா - கோபி ஜோடி!

ஒருநாள், டெஸ்ட் தொடர்களுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸி.!

SCROLL FOR NEXT