இந்தியன் கால்பந்து சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூா் அணியை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது சென்னையின் எஃப்சி.
பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வென்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இரு அணிகளும் சென்னையில் வியாழக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் மோதின. உள்ளூா் மைதானம் என்பதால், சென்னை அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டம் தொடங்கிய 17-ஆவது நிமிடத்திலேயே நட்சத்திர வீரா் வால்ஸ்கீஸ் முதல் கோலடித்தாா். தொடா்ந்து தாக்குதல் ஆட்டத்தில் சென்னை ஈடுபட்ட நிலையில், கெம்ப்ரி 43 ஆவது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடித்தாா். இதனால் முதல் பாதி இறுதியில் 2-0 என முன்னிலை பெற்றது சென்னை.
இரண்டாம் பாதி ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூா் அணி முன்னிலையைக் குறைக்க போராடியது. இதன் பலனாக 71-ஆவது நிமிடத்தில் அதன் வீரா் கேஸ்டில் அற்புதமாக கோலடித்தாா்.
எனினும் சென்னை வீரா்கள் தொடா்ந்து கோல் போடும் முயற்சியில், சாங்க்டே 87-ஆவது நிமிடத்தில் கோலடித்தாா். இறுதியில் 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது சென்னை. 18 புள்ளிகளுடன் 6-ஆவது இடத்தில் உள்ள சென்னை, இதன் மூலம் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்க வைத்துள்ளது.