ஆஸ்திரேலிய ஓபன் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், 3-வது சுற்றில் சீனாவின் கியங் வாங்கிடம் தோல்வியடைந்து வெளியேறியுள்ளார்.
இந்த வருட ஆஸ்திரேலிய ஓபன் போட்டியை வென்று 24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை செரீனா வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உலகின் 29-ம் நிலை வீராங்கனையான வாங்கிடம் 4-6, 6-7 (7-2), 5-7 எனத் தோல்வியடைந்து வெளியேறியுள்ளார்.
24 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று மார்கரெட் கோர்ட்டின் சாதனையை செரீனா வீழ்த்துவார் என்கிற எதிர்பார்ப்பு இதன் மூலம் மேலும் நீடிக்கிறது. கடைசியாக 2017-ல் ஆஸ்திரேலிய ஓபனை வென்ற பிறகு செரீனா ஏந்தவொரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வெல்லவில்லை. குழந்தை பிறந்த பிறகு கலந்துகொண்ட 7 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் நான்கில் இறுதிச்சுற்று வரை முன்னேறினார் செரீனா. எனினும் 24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்துக்கு அவர் இன்னும் காத்திருக்கவேண்டிய நிலைமையே தற்போது உள்ளது.