செய்திகள்

ஆசிய கோப்பைக்காக இந்திய அணி வராவிட்டால் டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க மாட்டோம்: பாகிஸ்தான் அறிவிப்பு

எழில்

பாகிஸ்தானில் நடைபெறவுள்ள டி20 ஆசிய கோப்பையில் விளையாட இந்திய அணி மறுத்தால் நாங்களும் இந்தியாவில் நடைபெறும் 2021 டி20 உலகக் கோப்பையில் பங்குபெற மாட்டோம்.

இதுதான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முடிவு,

இந்திய அணி பங்கேற்க மறுப்பதால், செப்டம்பரில் பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை டி20 போட்டியை நடத்த பாகிஸ்தான் அணி மறுத்துள்ளது. எனவே அப்போட்டி வங்கதேசத்தில் நடைபெறவுள்ளது எனச் செய்திகள் வெளியாகின. இதை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைமை அதிகாரி வாசிம் கான் மறுத்துள்ளார். அவர் கூறியதாவது:

ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் முடிவு இது. எனவே நாங்களோ ஐசிசியோ ஆசிய கோப்பை டி20 போட்டி பாகிஸ்தானில் நடைபெறுவதை மாற்ற முடியாது. பாகிஸ்தானில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை டி20 போட்டியில் விளையாட இந்திய அணி மறுத்தால் நாங்களும் இந்தியாவில் நடைபெறும் 2021 டி20 உலகக் கோப்பையில் பங்குபெற மாட்டோம் என்று கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

48 வயதினிலே..

SCROLL FOR NEXT