செய்திகள்

இந்திய ஏ அணி பந்துவீச்சாளர்களைச் சோர்வடைய வைத்த நியூஸி. ஏ அணி பேட்ஸ்மேன்கள்!

இந்தியா ஏ -நியூஸிலாந்து ஏ அணிகளுக்கு இடையிலான அதிகாரபூர்வமற்ற டெஸ்ட் ஆட்டம், கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வருகிறது...

எழில்

இந்தியா ஏ -நியூஸிலாந்து ஏ அணிகளுக்கு இடையிலான அதிகாரபூர்வமற்ற நான்கு நாள் டெஸ்ட் ஆட்டம், கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வருகிறது.

இந்திய ஏ அணி முதல் இன்னிங்ஸில் 216 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து விளையாடிய நியூஸிலாந்து ஏ அணி, 2-ம் நாளின் முடிவில் 114 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 385 ரன்கள் குவித்துள்ளது. இதுவரை விளையாடியுள்ள ஏழு பேட்ஸ்மேன்களில் ஒரு பேட்ஸ்மேன் மட்டுமே 4 ரன்களில் வெளியேறினார். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஓரளவு நிலைத்து நின்று அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். எனினும் 176 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய ஏ அணி அதற்குப் பிறகு தடுமாறியது. 6-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சேப்மேனும் விக்கெட் கீப்பர் கிளவரும் நன்கு விளையாடி இந்தியப் பந்துவீச்சாளர்களைச் சோர்வடையச் செய்தார்கள். 2-ம் நாளின் கடைசி வரை இந்த ஜோடியைப் பிரிக்க முடியாமல் போனது. சேப்மேன் 85 ரன்களும் கிளவர் 111 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை! | செய்திகள்: சில வரிகளில் | 4.11.25

நியூயார்க்கின் முதல் முஸ்லிம் மேயராகும் ‘ஸோரான் மம்தானி’?

சினேகிதியே... அதுல்யா ரவி!

கோவை பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை: சி.பி. ராதாகிருஷ்ணன்

அமைதிக்கும் குழப்பத்துக்கும் இடையே சென்னையில் எங்கோ ஓரிடத்தில்... ஆஷ்னா ஜவேரி!

SCROLL FOR NEXT