செய்திகள்

ரஞ்சி கோப்பையை வென்ற செளராஷ்டிரம் அணியில் விளையாடியவர்: புதுச்சேரிக்கு மாறினார் ஷெல்டன் ஜாக்சன்!

33 வயது ஜாக்சன், கடந்த வருட ரஞ்சி கோப்பைப் போட்டியில் 10 ஆட்டங்களில் 3 சதங்களுடன் 809 ரன்கள் எடுத்து அசத்தினார்...

DIN

கடந்த வருடம் ரஞ்சி கோப்பையை வென்ற அணி - செளராஷ்டிரம். அந்த அணியின் நட்சத்திர வீரர், ஷெல்டன் ஜாக்சன். 

33 வயது ஜாக்சன், கடந்த வருட ரஞ்சி கோப்பைப் போட்டியில் 10 ஆட்டங்களில் 3 சதங்களுடன் 809 ரன்கள் எடுத்து அசத்தினார். செளராஷ்டிர அணியில் அதிக ரன்கள் எடுத்தவர் இவர் தான்.

இப்படிப்பட்ட மிகச்சிறந்த வீரரை புதுச்சேரிக்கு விட்டுக்கொடுத்துள்ளது செளராஷ்டிரம். இந்த வருட ரஞ்சி சீஸனில் புதுச்சேரி அணிக்கு அவர் விளையாடவுள்ளார். இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மும்பை முன்னாள் வீரர் சல்வி, புதுச்சேரி கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராகக் கடந்த மாதம் நியமிக்கப்பட்டார். இதையடுத்து ஷெல்டன் ஜாக்சனை முக்கிய பேட்ஸ்மேனாகத் தேர்வு செய்துள்ளது புதுச்சேரி கிரிக்கெட் சங்கம்.

இதுவரை 76 முதல் தர ஆட்டங்களில் விளையாடியுள்ள ஜாக்சன், 19 சதங்களுடன் 5634 ரன்கள் எடுத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தளவாடங்கள் மீது அமெரிக்கா தாக்குதல்! மீண்டும் போர்?

வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடக்கம்!

ஆரா ஃபார்மிங் போல க்யூட்டாக நடனமாடிய அஜித்தின் மகன்..! வைரல் விடியோ!

ஏஐ துறையில் பெரும் சரிவுக்கு முதலீட்டாளர்கள் தயாராக இருக்க வேண்டும்: பில் கேட்ஸ்

SCROLL FOR NEXT